Saturday, 31 August 2013

வட மாகாண சபையில் நாம் வெல்வது உறுதி! அதில் எந்த மாற்றமும் இல்லை: கிளிநொச்சியில் பா. உறுப்பினர் யோகேஸ்வரன்


வட மாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால், கிளிநொச்சி மாவட்டத்தின் செல்வாநகர் கிராமத்தில் கரைச்சிப் பிரதேச உறுப்பினர் தம்பு சேதுபதியின் தலைமையில் நடாத்தப்பட்டது.
பிற்பகல் நான்கு மணிக்கு ஆரம்பித்த இப்பரப்புரைக் கூட்டம் இரவு இரவு 8 மணியளவில் நிறைவடைந்தது.


இப்பரப்புரைக் கூட்டத்தில் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிழக்கு மாகாணம் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகக் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நா.வை.குகராசா, உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment