Saturday, 31 August 2013

ஒரு தந்தையின் பாசப் போராட்டம்

சிரியாவில் இரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டதாக கருத்தப்பட்ட மகன் உயிருடன் திரும்பி வந்ததால் தந்தை அளவில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான போரில், கடந்த 21ம் திகதி இராணுவம் நடத்திய இரசாயன தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இதில் தனது மகனும் பலியானதாக கருதிய தந்தை, மனமுடைந்து விட்டார்.

இந்நிலையில் தனது மகன் மீண்டும் உயிருடன் வந்தது அவருக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தனது மகனை கட்டித் தழுவி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த வீடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment