Wednesday, 23 April 2014

12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயது சிறுவன்......


12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயது சிறுவன்......இங்கிலாந்தில் 12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இச்சிறுவன் 17 வயது முதல் 48 வயது வரை உள்ள 12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளான்
இதுகுறித்து பொலிஸ் உயரதிகாரி கூறுகையில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 12 பெண்களிடம் இவன் தவறாக நடக்க முயற்சித்துள்ளான்.
கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 48 வயது பெண்மணி ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சித்த போது மாட்டிக்கொண்டான் என்றும் இவனைக் குறித்து புகாரை வெளிப்படையாக அறிவித்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
இச்சிறுவன் 16 வயதுக்குட்பட்டிருப்பதால் சிறப்பு நீதிமன்றம் அவனுக்கு 12 மாதம் சிறார் சிறையில் தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சிறுவன் கூறுகையில்,நான் தெரியாமல் இத்தவறுகளை செய்துவிட்டேன் என்றும் இதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் எனவும் கூறியுள்ளான்.



No comments:

Post a Comment