[ சனிக்கிழமை,
31 ஓகஸ்ட் 2013,
11:18.12 AM GMT +05:30 ]
நாடு முழுவதும்
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் டெல்லி
சிறுவர் நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்துள்ளது.
டெல்லி மருத்துவ
மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 6ம் திகதி ஒடும் பேருந்தில் 6 பேர் கொண்ட
கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார்.
இந்த வழக்கில்
ராமன்சிங், முகேஷ்சிங்,
வினய்சர்மா, பவன்குப்தா, அட்சய்சிங் , இவர்களுடன் 16 வயது நிரம்பிய சிறுவன் ஒருவரும் அடங்குவார்.
இதற்கென விரைவு
நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 5 பேரில் ஒருவன்
திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.
தற்போது மைனர்
மீதான குற்றச்சாட்டானது தனியாக சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவனுக்கு
விதிக்கப்பட்டுள்ள தண்டனையானது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என மாணவியின் தயார்
கதறி அழுது வேதனை தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment