Saturday, 31 August 2013

டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கு: சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை


[ சனிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2013, 11:18.12 AM GMT +05:30 ]
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் டெல்லி சிறுவர் நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்துள்ளது.
டெல்லி மருத்துவ மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 6ம் திகதி ஒடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார்.

இந்த வழக்கில் ராமன்சிங், முகேஷ்சிங், வினய்சர்மா, பவன்குப்தா, அட்சய்சிங் , இவர்களுடன் 16 வயது நிரம்பிய சிறுவன் ஒருவரும் அடங்குவார்.

இதற்கென விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 5 பேரில் ஒருவன் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

தற்போது மைனர் மீதான குற்றச்சாட்டானது தனியாக சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


சிறுவனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையானது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என மாணவியின் தயார் கதறி அழுது வேதனை தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா