போரின்
இறுதிக்கட்டத்தில், சிறிலங்காப் படையினரால் இசைப்பிரியா
கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், அவர் சிறிலங்காப் படையினரால் உயிரோடு பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்படும்
காணொலி ஆதாரத்தை சனல் 4 நேற்று வெளியிட்டுள்ளது.
<iframe width="580" height="315" src="//www.youtube.com/embed/915_gGRZ5Lw" frameborder="0" allowfullscreen></iframe>
கடற்கரை ஒன்றில், மேலாடையின்றி நீருக்குள் அமர்ந்திருக்கும் இசைப்பிரியாவை, சிறிலங்காப் படையினர், வெள்ளைத் துணி ஒன்றைப் போர்த்தி இழுத்து வரும்
காட்சி அதில் பதிவாகியுள்ளது.
ஆறு சிறிலங்காப்
படையினர் அவரைப் பிடித்து வருவதும்,
அப்போது அவர்கள்
பிரபாகரனின் மகள் என்று அவரைக் கூறுவதும், அதற்கு அவர் ஐயோ
அது நானில்லை என்று அழுவதும் காட்சியில் பதிவாகியுள்ளது
இதன் மூலம்
இசைப்பிரியா சிறிலங்கா படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது
உறுதியாகியுள்ளது.
வெள்ளைத் துணி
போர்த்தப்பட்ட நிலையிலும், துணி அகற்றப்பட்ட நிலையிலும், இசைப்பிரியாவின் உடல் கிடந்த காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment