..

கடந்த திங்கட்கிழமை இலங்கை வந்த பாகிஸ்தானின்
இராணுவ குழு இன்று புதன்கிழமை
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. குறித்த
குழுவினரை இலங்கை இராணுவத்தினர் அழைத்துச்
சென்று யாழ்.கோட்டைப் பகுதியை
காண்பித்தனர்.
பாகிஸ்தானின்
தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினரே இந்தப்
பயணத்தில் இடம்பெற்றிருந்தனர். தாம் பல்வேறு நாடுகளுக்கும்
இவ்வாறான பயணங்களில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தக்
குழுவினர் யாழ்.கோட்டைப் பகுதியை
பார்வையிட்டதன் பின்னர் யாழ். துரையப்பா
மைதானத்திலிருந்து உலங்கு வானூர்தியில் புறப்பட்டுச்
சென்றனர்.



No comments:
Post a Comment