Sunday, 13 October 2013

இப்படியும் நடக்கின்றது! ஏமாற்றுப் பேர்வழிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்!


எப்­­டி­யெல்லாம் ஏமாற்றி காசு பறிக்க முடி­யுமோ அப்­­டி­யெல்லாம் ஏமாற்றி காசு பறிக்கும் கும்பல் இலங்கையில் நிறைந்து போயுள்­ளது. ஒவ்­வொ­ரு­வரும் புத்­தி­சா­லித்­­­மாக இருந்தால் மாத்­தி­ரமே இவர்க­ளி­­மி­ருந்து தப்­பிக்­கொள்ள முடியும்.
நேற்று நண்­பகல் அளவில் நபர் ஒரு­­ருக்குத் தொலை­பேசி அழைப்பு ஒன்று வந்­துள்­ளது.

அதில் பிர­பல தொலைத்­தொ­டர்பு நிறு­வனம் ஒன்றின் பெயரைக் கூறி அதி­லி­ருந்து பேசு­­தா­கவும், ஏற்­­னவே பல தட­வைகள் குறுஞ்­செய்தி அனுப்­பி­­தா­கவும், எனினும் தொடர்பு கொள்­ளாத காரணத்தினாலேயே தொடர்பு கொள்­­தா­கவும் அதன்­படி ரீலோட் செய்­ததன் கார­­மாக ரூபா  500,000 பரிசு கிடைத்­துள்­­தா­கவும், எனவே அந்தப் பணத்தை வங்­கியில் வைப்­பி­லிட அடை­யாள அட்­டை போட்டோ கொப்­பி­யையும், வங்கி இலக்­கத்­தையும் அனுப்பி வைக்­கு­மாறும் கோரப்­பட்­டுள்­ளது.

உடனே குறித்த நபர் கேட்­­வாறே தனது அடை­யாள அட்டை மற்றும் விப­ரங்­களை அனுப்பி வைத்­துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் தொலை­பேசி அழைப்பு வந்­துள்­ளது.

அதில் கையில் வெள்­ளைத்தாள் ஒன்றை எடுத்­துக்­ கொள்­ளுங்கள். அதில் பணம் பெற்­றுக்­ கொள்­வற்கு நன்றி தெரி­விப்­­தாக எமக்கு கடிதம் ஒன்றை எழுதி உடன் மின்­னஞ்சல் மூலம் அனுப்பி வையுங்கள் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது.

அதே­வேளை, நாங்கள் கொடுக்கும் இலக்­கத்­திற்கு உட­­டி­யாக 4200/= ரூபாவை ஈசி கேஷ் மூலம் அனுப்பி வையுங்கள் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது.


மேலும் 15  நிமி­டத்தில் அனுப்பி வைத்தால் மாத்­தி­ரமே உட­­டி­யாக  ரூபா 500,000 பெற்­றுக்­கொள்ள நாம் "பின்"  இலக்­கத்தைத் தெரி­விப்போம். நீங்கள் திங்­கட்­கி­ழமை குறித்த வங்­கிக்குச் சென்று பணத்தைப் பெற்­றுக்­கொள்ள முடியும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா