Friday, 27 September 2013

ஜெனீவாவிலிருந்து பெல்ஜியம் வரை ஈருருளிப் பயணம்


பெல்சியம் புரூசல்ஸ் நோக்கிய ஈருருளிப் பயணமானது நேற்றைய நாள் ஜேர்மன் நாட்டிலிருந்து புறப்பட்டு 6 கிலோமீற்றர்கள் தூரத்தை ஓடி முடித்து, லுக்ஸ்சம்பூர்க் நாட்டினையும் கடந்து பெல்சியத்தை வந்தடைந்துள்ளது.
எனினும் நேற்று அரசியல் ரீதியான சந்திப்புகள் நடைபெற்றதால் ஈருருளிப் பயணம் பெரியளவில் நடைபெறவில்லை. அத்தோடு இன்றும் அரசியல் சந்திப்புக்கள் நடைபெறவுள்ளதால் இவர்களது பயணம் நடைபெறமாட்டாது. மேலும் இவர்கள் புரூசலை சென்றடைய இன்னும் 180 கிலோமீற்றர்களே உள்ளது.
 
பெல்ஜியத்தில் தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான குழுவின் தலைவி லம்பெட் அவர்களைச் சந்தித்து ஐந்து அம்சக்கோரிக்கை பற்றி கலந்துரையாடப்பட்டது.

ஐரோப்பியன் ஒன்றியமானது மனித உரிமைகளுக்கும, ஜனநாயகத்திற்கும் முன்னுரிமை அளிக்கும். அந்தவகையில் தமிழ்மக்களின் அவலத்தைப் போக்கி, நிரந்தரமான நிம்மதியான வாழ்விற்கு பாடுபடும் என அவர் உறுதியளித்தார்.

எதிர்வரும் 30.09.2013 நடைபெறவுள்ள பேரணியில் அனைத்துலகத்திடம் நீதி கேட்க அனைத்து தமிழ்மக்களும் எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க அணிதிரளுமாறு மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் அழைப்புவிடுகிறார்கள்.


ஈருருளிப் பயணம் இறுதி நாளான 30.09.2013 அன்று பெல்ஜியம் தலைநகர் புரூசல்சிலில் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா