இவ்விருவரும்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவ்விருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பத் ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன்
சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவி கடந்த சில மாதங்களாக பாடசாலைக்கு வருகை தராமல்
இருந்துள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது இதனையடுத்தே
குறித்த ஆசிரியர் கந்தப்பளை பொலிசாரால் சந்தேகத்தின் பேரில்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம்
தொடர்பாக அறிந்து கொண்ட பாடசாலையின் பழைய மாணவர்கள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை
பாடசாலைக்கு சென்று உடனடியாக குறித்த ஆசிரியரை பாடசாலையைவிட்டு வெளியேற்றுமாறு
ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
நிலைமையை அறிந்து
கொண்ட சந்தேக நபரான ஆசிரியர் கடமையிலிருந்து அரை நாள் விடுமுறையுடன் செல்வதற்கு
முயற்சித்துள்ளார்.அங்கு வந்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். மாணவி
கர்ப்பமாகுவதற்கு மாணவியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார் என்று
தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து
சந்தேகநபர்கள் இருவரும் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம்
ஆஜர்படுத்தப்பட்டதை போதே அவ்விருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment