இந்தியாவின்
உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய ரயில் பாதையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட
ரயில் பெட்டி பயன்படுத்தப்பட்டுள்ளதா என இந்திய அதிகாரிகள் ரயில் திணைக்களத்தின்
அதிகாரிகளிடம் விசாரித்துள்ளனர்.
எனினும் முதல்
பயணத்தில் முக்கியஸ்தர்கள் பயணித்ததால் குளிரூட்டப்பட்ட பெட்டியொன்றை
பயன்படுத்தும் தேவை ஏற்பட்டதாகவும் திணைக்களத்திடம் சீனாவில் தயாரிக்கப்பட்ட
பெட்டிகளே இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை ஏற்காத
இந்திய அதிகாரிகள் இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியை
பயன்படுத்துவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று
குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சி
செல்லவிருந்த பல இந்திய அதிகாரிகள் இந்த பிரச்சினை காரணமாக ரயில் பயணத்தை மேற்கொள்ள
முடியாது என அறிவித்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment