Friday, 27 September 2013

வேலுப்பிள்ளை பிரபாகரனை விட சி.வி. விக்னேஸ்வரன் மிகவும் பயங்கரமான ஆபத்தான நபர்

பிரபாகரனை விட சி.வி. விக்னேஸ்வரன் மிகவும் பயங்கரமான ஆபத்தான நபர்
வேலுப்பிள்ளை பிரபாகரனை விட சி.வி. விக்னேஸ்வரன் மிகவும் பயங்கரமான ஆபத்தான நபர் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


பிரபாகரனின் போர் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணி எனினும் விக்னேஸ்வரனின் ராஜதந்திர முன்னணி கண்ணுக்கு புலப்படாத, மோதலில் ஈடுபடாத முன்னணி. கண்ணுக்கு தெரிவதும், மோதலில் ஈடுபடுவதும் இலகுவானது. எனினும் கண்ணுக்கு தெரியாத முன்னணியுடன் அதற்கு எதிராக செயற்படுவது இலகுவான காரியமல்ல. எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்றவகையில் இலங்கையின் அரசியலையும் அரசாங்கத்தையும் ஆட்டுவிக்க ஜாதிக ஹெல உறுமய இடமளிக்காது.

நாஷிசவாத அடிப்படைவாத குழுவிற்கு தேர்தலில் வெற்றி கிடைத்திருக்குமானால் அவர்கள் 77 ஆம் ஆண்டு மேற்கொண்ட பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க நினைத்தால் அதனை தோற்கடிக்க எமது கட்சி நடவடிக்கை எடுக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதுள்ள அச்சம் காரணமாக எமது கட்சி இந்த நடவடிக்கையை எடுக்க நினைக்கவில்லை. எதிர்கால சந்ததியை நினைத்து தமிழ் சமூகமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அஞ்ச வேண்டும்.


பயங்கரவாத அரசியல் முன்னணி ஒன்றுக்கு உலகில் எந்த நாட்டிலும் இவ்வாறு அரசியல் ரீதியான முன்னோக்கி செல்ல இடமளிக்கப்படவில்லை. யுத்தப் போராட்டத்தை விட ராஜதந்திர ரீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் மிகவும் பயங்கரமானது என சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா