Monday, 30 September 2013

மாங்காய் சாப்பிட்ட மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி: மட்டக்களப்பில் சம்பவம்


மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சிலர் இன்று திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலை விடுதியில் 77 மாணவிகள் தங்கியிருக்கின்றனர். அம்மாணவிகளில் 7 பேரே திடீர் சுகயீனமுற்றுள்ளனர்.

இவர்கள் சிகிச்சைக்காக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் ஐந்து மாணவிகள் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். எனினும் இரண்டு மாணவிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக ஆரையம்பதி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு சுகாதார அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு விசாரணைகளை மேற்கொண்டனர். மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீனம் ஏற்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளைகுறித்த மாணவிகள் மாங்காய் சாப்பிட்டதன் விளைவே திடீர் சுகவீனத்திற்கு காரணம். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் தான் நேரில் சென்று வினவியதாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா