Friday, 27 September 2013

யாரிடம் பதவிப் பிரமாணம் செய்வது என்பது குறித்து பரிசீலிக்கவுள்ளோம்: சீ.வி.விக்­னேஸ்வரன்


வட­மா­காண ஆளு­நரின் பதில் கிடைத்­ததும், முத­­மைச்சர் சத்­தி­யப்­பி­­மாண விட­யத்­தையும் அமைச்சர் வாரிய நிய­­னங்­களைப் பற்­றியும் பரி­சீ­லிப்போம். அவ­ரு­டைய பதிலுக்­காக காத்திருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

வடக்குத் தேர்­தலில் கூட்­­மைப்பின் சார்பில் போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்­டிய 28 அங்­கத்­­வர்­களும் ஏகமனதான தீர்­மா­னத்­துடன் என்னை முத­­மைச்­­ராக்கும் படி வட­மா­காண ஆளு­­ருக்கு உத்தியோகபூர்வ­மாக செய­லாளர் நாயகம் மாவை சேனா­தி­ராசா கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கடிதம் ஒன்றை அனுப்­பி­வைத்­துள்ளார்.

முத­­மைச்சர் நிய­­னத்­துக்­கான சிபா­ரிசை அனுப்­பி­ வைத்­துள்ளோம். முத­­மைச்சர் ஒருவர் யாரிடம் பத­விப் ­பி­­மாணம் செய்­­வேண்­டு­மென்­பது மாகாண சபை சட்­டத்தில் தெளி­வாக சொல்­லப்­பட்டிருக்­கி­றது.

ஆளு­நரின் உத்­தி­யோ­­பூர்வ பதில் கிடைத்­ததும் முத­­மைச்­­ராக எப்­பொ­ழுது சத்­தி­யப் ­பி­­மாணம் எடுப்பது? யாரிடம் எடுப்­பது என்­பது பற்றி பரி­சீ­லிக்­­வுள்ளோம் எனக் கூறினார்.

யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­­னிடம் இவ்­வி­டயம் குறித்து வினவியபோது, மாவை சேனா­தி­ராசா மூலம் எமது முத­­மைச்சர் நியமனத்துக்கான சிபா­ரிசை அனுப்­பி­ வைத்­துள்ளோம். முத­­மைச்சர் ஒருவர் யாரிடம் பத­விப் ­பி­­மாணம் செய்­­வேண்­டு­மென்­பது மாகா­­சபை சட்­டத்தில் தெளி­வாகச் சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­­மைப்­பி­­ரா­கிய நாங்­களே யாரிடம் முத­­மைச்சர் பதவிப் பிர­மாணம் செய்ய வேண்­டு­மென தீர்­மா­னிக்க முடியும். ஜனா­தி­­தி­யி­டமோ அல்­லது ஆளுநரி­டமோ பதவிப் பிரமாணம் செய்­­வேண்­டு­மென்ற கட்­டாயம் இல்லை. சாதா­ரண சட்­டத்­­ரணி ஒரு­­ரி­டமும் சத்­தி­யப் ­பி­­மா­ணத்தை மேற்­கொள்ள முடியும்.

2012 ஆம் ஆண்டும், 1989 ஆம் ஆண்டும் மாகா­­சபை முத­­மைச்­சர்கள் ஜனா­தி­­தி­யி­டமும் ஆளுநரிடமும் பதவிப் பிர­மாணம் மேற்­கொண்­டுள்­ளார்­களே என வின­வி­­போது 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகா­­­பையில் வென்­­வர்கள் சுதந்­திரக் கூட்­­மைப்பு என்ற கார­ணத்­தினால் அவர்கள் ஜனாதி­­தி­யிடம் பதவிப் பிர­மாணம் செய்­தார்கள்.


அதேபோல் 1989 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகா­­­பையின் முத­­மைச்சர் ஆளுநர் முன் பதவிப் பிர­மாணம் செய்­தார்கள். ஆனால், அந்தத் தேவை வடக்கு மாகாணத்திற்கு தேவை­யில்லை. யாரிடம் பத­விப்­ பி­­மாணம் செய்­­ வேண்­டு­மென்­பதை தமிழ்த் தேசியக் கூட்­­மைப்­பி­­ரா­கிய நாங்­களே முடிவு செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா