Tuesday, 24 September 2013

புத்தளத்தில் வாக்குச் சீட்டுக்கள் மீட்பு


புத்தளத்தில் வாக்குச் சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்ட வாக்கு எண்ணும் நான்கு நிலையங்களில் ஒன்றான புனித அன்ட்றூஸ் வித்தியாலயத்திலேயே வாக்குச் சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச் சீட்டுக்கள் கட்சிகளுக்கு வாக்களிக்கப்பட்டவை.

பாடசாலையில் வகுப்பறைகளை சுத்தம் செய்த போது இந்த வாக்குச் சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும், தோல்வியடைந்த வேட்பாளர்களும் பாடசாலையை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு விருப்பு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, புத்தளம் மாவட்ட விருப்பு வாக்குகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கபே அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக கபே குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா